கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனாவுக்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 663 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் 25 மாநிலங்களில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று கோவா மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 128 பேருக்கும் கேரளாவில் 118 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இந்தியா